கடலூர், பிப்.11– வடலூரில் 154 வது தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா,வில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை ஆக வாழ்ந்தவர் இராமலிங்க அடிகளார் எனும் வள்ளலார். கடலூர் மாவட்டம், வடலூர் அருகே உள்ள மருதூர் கிராமத்தில் பிறந்தவர். வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவிய வள்ளலார், ஏழை எளிய மக்களின் பசியைப் போக்க, சத்திய ஞான சபையில் தருமசாலையை நிறு வினார். அன்று முதல் அணையா அடுப்பு எரிந்து பசிப்பிணி நீக்கி வருகிறது. வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 154 ஆம் ஆண்டு தைப்பூசப் பெருவிழா செவ்வாய்க்கிழமை(பிப்.11) நடைபெற்றது. ஏழு திரை நீக்கி காண்பிக்கப்பட்டது. ஜோதி தரிசனத்தில் இதில் கடலூர் மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சன்மார்க்க அன்பர்கள் வடலூரில் லட்சக்கணக்கானோர் வந்திருந்தனர். இந்த நிகழ்வுகளையொட்டி, குற்ற நிகழ்வுகளைத் தடுக்கவும், போக்கு வரத்தை சீா் செய்யவும், கூட்டத்தை ஒழுங்கு படுத்தவும் 1000 காவல்துறையினர் சுழற்சி முறையில் பணியாற்றினர். 10 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள் ளன. 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டிருந்தது.