சென்னை, ஜூன் 6- சென்னை பெரம்பூர் முத்தமிழ் நகர் 8ஆவது பிளாக் 197ஆவது தெருவில் வசிப்பவர் சாதாரண கூலித் தொழிலாளி பிரகாஷ். இவரது மகள் பி.ரேவதி. இவர் பெரம்பூரில் உள்ள அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மாவட்ட, மாநில அளவில் நடைபெற்ற கிக் பாக்சிங் போட்டியில் பல பரிசுகளை வென்றுள் ளார். இந்நிலையில் கடந்த மாதம் நேபாளத்தில் நடை பெற்ற உலக கிக் பாக்சிங் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்தை வென்றார் மேலும் அடுத்த மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ள உலக கிக் பாக்சிங் போட்டியில்பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் போட்டியில் பங்கேற்கும் அளவிற்கு பொருளாதார சூழ்நிலை இல்லாத காரணத்தால் அவர் தாய்லாந்து செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே தமிழ்நாடு அரசும், விளையாட்டு துறையும் தான் தாய்லாந்து சென்று வருவதற்கு பொருளாதார ரீதியாக உதவி செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.