districts

img

கட்டவாக்கம் நெல் சேமிப்பு கிடங்கில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

காஞ்சிபுரம், மே 8 - காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம், கட்டவாக்கம் ஊராட்சி யில் திறந்தவெளி நெல் சேமிப்பு மையத்தை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி திடீர் ஆய்வு மேற்கொண்டார். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அனைத்தை யும் , 131 அட்டிகள் திறந்தவெளியில் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்ட நிலையில் அதனை பிரித்து ஆய்வு செய்து பல்வேறு அறிவுரை வழங்கினார். மேலும் மழை பெய்தால் நெல் மூட்டைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் தார்ப்பாய்கள் கொண்டு முழுமையாக மூடி வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து திறந்தவெளி நெல் சேமிப்பு மைய அலுவலகத்தில் பரா மரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு, திறந்தவெளி நெல் சேமிப்பு மையத்திற்கு அருகில் ரூ.14.43 கோடி  மதிப்பீட்டில் 3000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 5 சேமிப்பு கிடங்குகள் கட்டப்படுவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு நிலை யங்களிலும் அனைத்து பாதுகாப்பு நட வடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும் என அனைவருக்கும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அருள் வனிதா, உதவி மேலாளர் ஜெயவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். இந்நிலையில் தற்போது அங்கங்கே பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை திடீர் என பெய்து வருவதால் இந்த நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது சேதாரத்தை தவிர்க்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.