கள்ளக்குறிச்சி, அக்.27- தொகுப்பூதிய முறையை ஒழித்திட வும் காலிப் பணியிடங்களை நிரப்பிடவும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கள்ளக்குறிச்சி மாவட்ட 2 வது மாநாடு வலியுறுத்தியுள்ளது. மாவட்டத் தலைவர் எல்.அனந்த கிருஷ்ணன் மாநாட்டிற்கு தலைமை தாங்கி னார். மாநிலச் செயலாளர் அண்ணா குபேரன் கொடியேற்றி மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்ட துணைத்தலை வர் டி.கொளஞ்சி வேலு வரவேற்புரை யாற்றினார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட இணைச் செயலாளர் ஏ.வேலு வாசித்தார். வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் கே.மகாலிங்கம், நிதிநிலை அறிக்கையை மாவட்டப் பொருளாளர் ப.ரவி ஆகியோர் வாசித்தனர். மகளிர் மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் எல். அனந்த கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் துணை குழு உறுப்பினர் எம்.வள்ளி வரவேற்புரையாற்றினார். மாநாட்டு வேலை அறிக்கையினை மாவட்ட அமைப்பாளர் மகளிர் துணைக் குழு வி.காஞ்சனாமேரிவாசித்தார். எஸ்டிஎப்ஐ நிர்வாகி சுதா சிறப்புரையாற்றினார். எம்.செந்தில்(சிஐடியு) வாழ்த்தியும் அரசு ஊழியர்சங்க மாநிலத் தலைவர் (பொ) சா.டானியல்ஜெயசிங் நிறைவுசெய்தும் பேசினர். மாவட்ட இணைச் செயலாளர் ஏ.சாமிதுரை நன்றிகூறினார். தீர்மானம் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வரவேண்டும் முடக்கப்பட்ட அக விலைப்படி,சரண் விடுப்பு பெறவேண்டும், சத்துணவு அங்கன்வாடி உட்புற நூலகர் வருவாய் கிராம உதவியாளர் எம்ஆர்பி செவிலியர்கள் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் பெற்றிடவும், ஊராட்சி செயலாளருக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கிடவும், தொகுப்பூதிய முறையை ஒழித்திடவும் காலிப் பணியிடங்களை நிரப்பிடவும், பொதுத் சுகா தாரத் துறையில் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் என்.எம்.ஆர் ஊழியர்களை நிரந்தப்படுத்தவும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளை சரி செய்திடவும் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, மாவட்டக்குழு தேர்வு இறுதியில்14 பேர் கொண்ட மாவட்ட குழுவிற்கு தலைவராக எல். ஆனந்த கிருஷ்ணன் செயலாளராக கே.மகாலிங்கம், பொருளாளராக ஏ.சாமிதுரை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.