districts

img

கள்ளக்குறிச்சி: 2 ஆயிரம் பேர் கைது

கள்ளக்குறிச்சி, செப்.7- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 மையங்களில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஒன்றிய பாஜக அரசின் கொள்கை களுக்கு எதிராக ஆவேச முழக்கமிட்டனர். இதில் 240 பெண்கள் உட்பட 100 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கள்ளக்குறிச்சியில் மாநிலக்குழு உறுப்பினர் வீ.அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 95 பெண்கள் உட்பட 205 பேர் கைது செய்யப்பட்டனர். உளுந்தூர்பேட்டையில் கட்சியின் மாவட்ட செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 64 பெண்கள் உட்பட 210 பேர் கைது செய்யப்பட்டனர்.  கல்வராயன்மலையில் செயலாளர் வி.அண்ணாமலை தலைமையில் நடை பெற்ற போராட்டத்தில் 110 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சின்னசேலத்தில் வட்டச் செயலாளர் டி.மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற ரயில் நிலைய மறியல் போராட்டத்தில் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சங்கராபுரத்தில் வட்டச் செயலாளர் எஸ்.சிவாஜி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 160 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வாணாபுரம் கூட்டு சாலையில் வட்டச் செயலாளர் வை.பழனி தலைமையில் நடை பெற்ற போராட்டத்தில் 150 பேர் கலந்து கொண்டார்கள். திருக்கோவிலூரில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஏழுமலை தலைமையில் நடை பெற்ற போராட்டத்தில் 150 பேர் பங்கேற்ற னர். களமருதூர் ஒன்றிய செயலாளர் டி.எஸ்.மோகன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 120 பேர் கலந்து கொண்டனர். குன்னத்தூர் ஒன்றிய செயலாளர் ஆர்.சீனுவாசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 120  பேர் பங்கேற்றனர்