districts

மாணவிகளை மிரட்டும் கீழ்த்தரமான வேலையில் கலாஷேத்ரா நிர்வாகம்

சென்னை,ஏப்.8- மாணவிகளை மிரட்டும் கீழ்த்தர வேலையில் ஈடுபடும் கலாசேத்ரா நிர்வாகத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக  வாலிபர் சங்கம் சார்பில் வெளியிடப் பட்டுள்ள அறிக்கை வருமாறு:  சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள கலாஷேத்ரா கல்லூரி யில் பயிலும் மாணவிகள், சில   பேராசிரியர்களால் தொடர்ந்து பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப் பட்டதும், நிர்வாகம் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்ததும்  தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேசிய மகளிர் ஆணையத்தின் கண்டனத்துக்குரிய அணுகு முறையையும் தாண்டி,  அங்கு  பயிலும் மாணவிகளின் உள்ளிருப்பு  போராட்டம், மாநில மகளிர் ஆணை யத்தின் தலையீடு, ஜனநாயக அமைப்பு கள் மற்றும் தனி நபர்களின் கண்டன குரல்களைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.  ஒரு பேராசிரியர்  கைது செய்யப்பட்டுள்ளார். அவர் உட்பட  4 பேராசிரியர்கள் பணி நீக்கம்  செய்யப்பட்டுள்ளார்கள். இத்தகைய சூழலில் திரைக் கலைஞர் அபிராமி போன்றவர்களை வைத்து நிர்வாகம் இப்படிப்பட்ட குற்றம் இங்கு நடக்கவில்லை என்ற   செய்தியைப் பரப்புகின்றது.  மேலும்  புகார் மனு அளித்த மாணவிகளின்   நடத்தை குறித்து தவறான பிரச்சா ரத்தை நிர்வாகம் கட்டவிழ்த்து விடு கின்றது.  

கல்லூரி முன்பு நாளை பெண்கள், மாணவர்கள்  போராட்டம்   
கல்லூரி நிர்வாகம் பாதிக்கப்பட்ட மாணவிகளை மிரட்டுவதை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு பிணை கிடைத்தால் ,பாதிக்கப்பட்ட மாணவிகளை மிரட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை வலியுறுத்தியும் திங்களன்று (ஏப். 10)  காலை 11 மணிக்கு கலாஷேத்ரா கல்லூரியின் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ,இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

புகார் மனு அளித்துள்ள மாண விகளை மிரட்டுவதாகவும் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்திற்கு தகவல் வந்துள்ளது. பாலியல் துன்புறுத்தல் பிரச்சனைகளில் புகார் கொடுக்கும் பெண்களின் நடத்தை குறித்து அவதூறுகளை அள்ளி விடும் வழக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது வன்மையான கண்டனத்துக்கு உரியது.  ஏற்கனவே கல்லூரி நிர்வாகம் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பக்கம்  நிற்காமல் குற்றவாளிகளை பாது காத்தது. பிரச்சனை பெரிதான பின்புதான், இதனை   விசாரிக்க  நீதிபதி கண்ணன் தலைமையில் ஒரு குழுவை  கல்லூரி நிர்வாகம் அமைத்துள்ளது. அந்த விசாரணைக்குழு அமைக்கப்பட்டு ஒரு வார காலம் ஆகியும் இன்னும்  அக்குழு விசாரணையை துவங்க வில்லை. ஏப்ரல் 12ஆம் தேதி அனைத்து  மாணவிகளும் தேர்வை முடித்து தங்கள் வீடுகளுக்கு திரும்ப இருக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான் மையானவர்கள் வெளிமாநிலத்தை  மற்றும் வெளிநாட்டைச் சார்ந்தவர்கள்.  இந்தச் சூழல் தெரிந்தும், விசாரணையை துவங்காததால், இக்குழுவின் நம்பகத்தன்மை கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது.  இச்சூழலில் கைது செய்யப்பட்ட ஹரி பத்மன் நீதிமன்றத்தில் பிணை கோரி மனு தாக்கல் செய்திருக்கிறார் . கடந்த காலத்தில் இந்த பேராசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு எந்த நீதியும் கிடைக்காமல் மிக நீண்ட போராட்டத்திற்கு பின்பு தான் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் மூன்று  பேராசிரியர்கள் இன்று வரை கைது செய்யப்படவில்லை.  மாநில மகளிர் ஆணையத்திலும் 60க்கும் மேற்பட்ட மாணவிகள் தாங்கள்  பாதிக்கப்பட்டதாக புகார் மனுவை  அளித்துள்ளனர். எனவே குற்ற வாளிக்கு நீதிமன்றம் பிணை வழங்கி னால்,  நிர்வாகத்தின் ஆதரவுடன், ஹரி பத்மனால் மேலும் மாணவிகளுக்கு அச்சுறுத்தல் வரும், சாட்சிகள் கலைக்கப்படுவார்கள், எனவே  ஹரி பத்மனுக்கு பிணை கொடுப்பதை எதிர்க்க வேண்டும் என ஜனநாயக மாதர் சங்கம் கருதுகிறது.  எனவே மாநில மகளிர் ஆணையம் பிணை கொடுப்பதை எதிர்த்து மனு  தாக்கல் செய்ய வேண்டும்  எனக் கோருகிறது. மாதர் சங்கத் தரப்பிலும் மனு தாக்கல் செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்படும். மாணவிகள் களத்திலும் நீதி மன்றத்திலும் நடத்தும் போராட்டங்க ளுக்கு தமிழக அரசும், மாநில மகளிர்  ஆணையமும், ஜனநாயக அமைப்பு களும் துணை நிற்க வேண்டும்.   இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.