திருவள்ளூர், அக்.3- மலைக்குறவன் இன மக்களுக்கு சாதிச் சான்றிதழ் கேட்டு அக் 10 அன்று பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடு வது என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் முடிவுசெய்துள்ளது. கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள ஆத்துப்பாக்கத்தில் ஞாயிறன்று (அக்-1), மலைக்குறவன் சங்கப் பெயர் பலகையை தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலச் செயலா ளர் ஏ.வி. சண்முகம் திறந்து வைத்தார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கொடியை, மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் இ.கங்காதுரை ஏற்றிவைத்தார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழரசன், சிபிஎம் கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், வாலிபர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் ப.லோகநாதன், சிஐடியு நிர்வாகிகள் எம்.சி.சீனு, வி.குப்பன் ஆகியோர் பேசினர். கிளை தலைவராக கே.மதி, செயலாளராக ஜெ.சிவா, பொருளாளராக ஏ.முனுசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இம் மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க கோரி வருகிற அக் 10 அன்று பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.