districts

சென்னை முக்கிய செய்திகள்

தோழர் அரி உடல் தகனம்

சென்னை, செப். 26 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழும்பூர் பகுதி முன்னாள் செயலாளர் தோழர் சி.அரி (எ) அரிஹரன் உடல்  வியாழனன்று (செப்.26) ஓட்டேரி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதனையொட்டி மயானத்தில் மூத்த தலைவர் ராஜாமணி தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில்  மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ.பாக்கியம், எம்.ராமகிருஷ்ணன், எழும்பூர் பகுதிச் செயலாளர் கே.முருகன் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக தோழர் அரி உடலுக்கு வடசென்னை மாவட்டச்  செயலாளர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.சண்முகம், எஸ்.கே.மகேந்திரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

சிபிஎம் கிளை மாநாடுகள்

வடசென்னை மாவட்டம் திருவிக நகர் பகுதிக் குழுவிற்குட்பட்டு நடைபெற்ற கிளை மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட கிளை செயலாளர்கள் விவரம்
71ஆவது வட்டக் கிளை - சி.சுவாமிநாதன்
72ஆவது வட்ட ‘ஏ’ கிளை - எஸ்.கோவிந்தராஜ்
72ஆவது வட்ட ‘பி’ கிளை - கே.முருகேசன்
73ஆவது வட்டக் கிளை - எம்.அசோக்குமார்
74ஆவது வட்ட‘ஏ’ கிளை - ஏ.ராமச்சந்திரன்
74ஆவது வட்ட‘பி’ கிளை - எஸ்.பாலமுருகன்
74ஆவது வட்ட பெண்கள் கிளை - ஏ.ஜான்சிராணி
75ஆவது வட்ட கிளை - எஸ்.நவநீதன்
75ஆவது வட்ட பெண்கள் ‘ஏ’ கிளை - ஜெ.சரளாதேவி
75ஆவது வட்ட பெண்கள் ‘பி’ கிளை - எஸ்.தாமரைச் செல்வி
75ஆவது வட்ட எஸ்விஎம் நகர் பெண்கள் கிளை - கே.ராஜலட்சுமி
75ஆவது வட்ட எஸ்விஎம் நகர் - ஏ.கே.சதீஷ்
76ஆவது வட்ட ‘ஏ’ கிளை - கே.சுரேஷ்குமார்
76ஆவது வட்ட ‘பி’ கிளை - சி.பி.வினோத்
76ஆவது வட்ட தேவராஜ் தெரு கிளை - பி.மனோகரன்

ஸ்மார்ட்போன் புகைப்பட விருதுகள் அறிவிப்பு

சென்னை, செப். 26-  கற்பனையின் ஆற்றலைக் கொண்டாட, புகைப்படக் கலைஞர்களின் படைப்பாற்றலை கவுரவிக்க, விவோ ஸ்மார்ட் போன் நிறுவனம் ‘விவோ இமேஜின் ஸ்மார்ட் போன் புகைப்பட விருதுகள்’ இரண்டாவது பதிப்பை நடத்தியது.  இதில் குக்கலா சுரேஷ் தனது அசத்தலான புகைப்படத் திற்காக 5 லட்சம் ரூபாய் பரிசு பெற்றார். நாடு முழுவதிலு மிருந்து 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இதில் இடம் பெற்றன. இதில் ஒவ்வொரும் தங்களின் தொழில்நுட்பம் மற்றும் தனித்திறமையை வெளிப்படுத்தி இருந்தனர். ஆறு பிரிவுகளில் வெற்றி பெற்ற வெற்றி யாளர்களுக்கு தலா ஒரு விவோ எக்ஸ்100 புரோ ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டது. கட்டிடக்கலையில் பந்தீஷ் ரவீந்திர வடயேகர், உருவப்படத்தில் லோபமுத்ரா தாலுக்தார்,  தெரு மற்றும் கலாச்சாரத்தில் சௌம்யசிகா மன்னா, இயற்கை மற்றும் புல்வெளி பிரிவில் ரத்தின் டே, இயக்கத் தில் இட்ரீஸ் அப்பாஸ் தார் மற்றும் இரவு மற்றும் ஒளி பிரிவில் குக்கலா சுரேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

காவலரை பார்த்து குதித்தவர் காயம் 

சென்னை, செப். 26- எத்திராஜ் கல்லூரி சாலையில் உள்ள சிவாலயா அடுக்கு மாடி கட்டிடத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட ஸ்பா சென்டரில் போலீசார் சோதனைக்கு சென்றனர். அங்கு பணி யில் இருந்த இளம்பெண் விசாரணைக்கு பயந்து பின்பக்க மாக உள்ள ஜன்னல் வழியாக வெளியே குதித்துள்ளார். இதில் கீழே விழுந்ததில் கை, கால்கள், இடுப்பு போன்ற பகுதி களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. போலீசார் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். திருத்தம் நேற்றைய இதழின் 8ஆம் பக்கத்தில், ‘மார்வாடி தோட்ட  மக்களை அச்சுறுத்தக் கூடாது’ என்று  தலைப்பிட்ட செய்தி யில், ஊர் பெயர் தவறுதலாக வெளியாகி உள்ளது. அதை முத்துரெட்டி தோட்டம் என்று திருத்தி வாசிக்கவும். தவறுக்கு வருந்துகிறோம். -ஆர்.

பைக் டாக்சிகளை தடை செய்ய வேண்டும்
8 மையங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்

சென்னை, செப். 26 - சட்டவிரோதமாக செயல்படும் பைக், டாக்சிகளை தடை செய்ய வலியுறுத்தி  செவ்வாயன்று (செப்.24) சென்னையில் 8 மையங்களில் போராட்டம் நடைபெற்றது. ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்கத்தின் (தென்சென்னை) சார்பில் 7 ஆர்டிஓ அலுவலகங்கள் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் 1500க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். பர்மிட் இல்லாமல் இயங்கும் மெட்ரோ பச்சை நிற ஆட்டோக்களை பொது சேவைக்கு அனு மதிக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சின்மையா நகர் ஆர்டிஓ அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு என்.ஜீவா தலைமை தாங்கினார். சிஐடியு தென்சென்னை மாவட்டப் பொருளாளர் ஏ.நடராஜன், ஆட்டோ சங்க மாவட்ட பொதுச்  செயலாளர் இ.உமாபதி, நிர்வாகிகள் சி.முரு கன், கே.சுப்பிரமணி ஆகியோர் பேசினர். கே.கே.நகர் ஆர்டிஓ அலுவலகம் முன்பு எம்.மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் ஜெ.முகமது அனீபா, நிர்வாகிகள் சி.சத்ய தாசன், ஜி.ஏழுமலை உள்ளிட்டோர் உரையாற்றினர். கொட்டிவாக்கம் ஆர்டிஓ அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு எஸ்.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் வெல்கின், ஆட்டோ சங்க மாவட்ட பொருளாளர் ஏ.பக்கிரி, நிர்வாகிகள் ஜெ.கோபால், பி.ஞானபிரகாஷ் உள்ளிட்ட தலைவர்கள் பேசினர். சோழிங்கநல்லூர் ஆர்டிஓ அலுவலகம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்.தீனதயாளன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் ம.விஜயகுமார், நிர்வாகிகள் சி.வெள்ளக்கண்ணு, ஜி.கிருஷ்ணமூர்த்தி, கே.மனோகரன் உள்ளிட்டோர் பேசினர். ஆலந்தூர் ஆர்டிஓ அலுவலகம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.அய்ய னார் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.சந்தா னம், நிர்வாகிகள் என்.பாபு, ஏ.ஜான், என்.அமரேசன் உள்ளிட்டோர் பேசினர். தாம்பரம் ஆர்டிஓ அலுவலகம் முன்பு  வி.எஸ்.பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மூத்த  தலைவர் எஸ்.அப்பனு, ஆட்டோ சங்க  நிர்வாகிகள் கே.முருகேசன், டி.என்.ஜெக தீசன், ஆர்.கோதண்டன் உள்ளிட்டோர் பேசி னர். மந்தைவெளி ஆர்டிஓ அலுவலகங்கள் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எம்.மணி தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.பி.ராமு,  ஆட்டோ சங்க தலைவர்கள் டி.சாந்தி, ஜி.ராம லிங்கம், ஹரிநாராயணன் உள்ளிட்டோர் பேசினர். மத்திய சென்னை ஆட்டோ டாக்சி தொழிலாளர் சங்கம் - மத்தியசென்னை மாவட்டம் சார்பில் தலைமை செயலகம் நோக்கி பேரணி நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட ஓட்டு நர்கள் கலந்து கொண்ட இந்தப் பேரணிக்கு  மாவட்டத் தலைவர் ஆர்.கபாலி தலைமை  தாங்கினார். தமிழ்நாடு ஆட்டோ தொழி லாளர் சம்மேளன செயல் தலைவர் எஸ்.பால சுப்ரமணியம், மாவட்ட பொருளாளர் ஏ.பிரபாகரன், சிஐடியு மாவட்ட துணைத்  தலைவர் எம்.சந்திரன், சாலை போக்கு வரத்து தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கே.முருகேஷ், செயலாளர் ம.உதயகுமார் உள்ளிட்டோர் பேசினர்.

அரசு பேருந்து கவிழ்ந்து  விபத்து 7 பேர் காயம் 

 கடலூர்,செப்.26 - கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் இருந்து புலியூர் வழி யாக குள்ளஞ்சாவடி வரை 6 எண் வழித்தடத்தில் அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பேருந்து புலியூர் அருகே வந்து கொண்டிருந்த பொழுது எதிரே வந்த பள்ளி வாகனத்திற்கு வழி விடுவதற்காக சாலை யில் ஓரத்திற்கு சென்ற பொழுது திடீரென நிலை தடு மாறி அருகில் இருந்த நெல் வயலில் அரசு பேருந்து தலை கீழாக கவிஞர் விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் ஓட்டு நர் உட்பட ஏழு பேர் பலத்த காயங்களுடன் 108 ஆம்பு லன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை தீவிர அளிக்கப்பட்டு வருகிறது.

பாலர் பள்ளிகளில்  புதிய பாடத்திட்டம் அறிமுகம்

சென்னை, செப். 26- நாட்டில் பாலர் பள்ளி பிரிவில்  பல்வேறு கிளை களை கொணடுள்ள யூரோகிட்ஸ் தனது பாடத்திட்டத்தில்  ‘ஹுரேகா’ என்ற புதிய பாடத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. குழந்தைகளின் சிந்திக்கும் திறனை வெளிப்படுத்துவதை உணரச்செய்யும் பாடத்திட்டமாக அமைந்திருக்கும் என்று  யூரோகிட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கே.வி.எஸ்.சேஷசாய் கூறினார்.   உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ’ப்ராஜெக்ட் ஜீரோ’ வினால் ஈர்க்கப்பட்டு இப்பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.  குழந்தைகளின் சிந்தனை மற்றும் சிந்தனைப்பூர்வமான படைப்பாற்றல் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் புதிய பாடத்திட்டம் மிகுந்த அக்கறையுடன் வடி வமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். யூரோ கிட்ஸ், உயர்தர ஆரம்பக் கல்வியின் அவசியத்தை அடை யாளம் கண்டிருக்கிறது. இதனால் யூரோகிட்ஸ் தனது பாடத்திட்டத்தை சமீபத்திய அம்சங்களுடன் தொடர்ந்து புதுப்பித்து வருகிறது என்று பாடத்திட்ட மேம்பாட்டு பிரிவின் தலைவர் டாக்டர் அனிதா மதன் கூறினார்.

பண்டிகை கால சலுகைகள் அறிவிப்பு

சென்னை, செப். 26-  உயர் செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன் பிராண்டான ஐக்யூஓஓ, அதன் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தில், அமேசான்.இன் தளத்தில் இதன் இசட்9எஸ், இசட்9 லைட் 5ஜி, இசட்9எக்ஸ் 5ஜி, நியோ 9 புரோ,  ஐக்யூஓஓ 12 5ஜி மற்றும் டிடபிள்யூஎஸ் 1இ இயர்போன் போன்ற வற்றிற்கு பல்வேறு சலுகைகளை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த பிரத்யேக சலுகைகள் செப்டம்பர் 27 முதல் அமேசான் கிரேட் இந்தியன் திருவிழா வின் போது கிடைக்கும் என்றும் இந்நிறுவனம் தெரி வித்துள்ளது. தள்ளுபடி விலையோடு எக்ஸ்சேஞ் சலுகை யும் அறிவித்துள்ளது.

குடோனில் பயங்கர தீ விபத்து

செங்கல்பட்டு, செப்.26- வண்டலூர் அருகே கொளப்பாக்கத்தில் பெயிண்ட் குடோனில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின. செங்கல் பட்டு மாவட்டம், வண்டலூர் அருகே கொளப்பாக்கத்தில் அடுத்தடுத்து 2 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. இதன் மத்தியில் பெயிண்ட் குடோன் உள்ளது. இதில், ரசாயனகழிவுகள், பஞ்சு, பெயிண்ட் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளன. இந்நிலையில், பெயிண்ட் குடோனில்  பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

வருவாய் கோட்டாட்சியர் வடசென்னை கோட்டம் 

ஆர்.எம்.இப்ராஹிம்.பி.ஏ.,
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்,
வடசென்னை கோட்டம், 
காந்திநகர் பிரதான சாலை,
புழல், சென்னை - 600 066.       ...மனுதாரர்

M. ரமேஷ்பாபு S/o G.முனுசாமி 
No: 523 மேட்டு தெரு, காலனி மெயின் ரோடு,
தாதாபுரம் (Po) திண்டிவனம் (T.K)
வெள்ளிமேடு பேட்டை (Via)
விழுப்புரம் (DT) 604 207  ...எதிர்மனுதாரர்
பொருள்: இறப்பு சான்று - சென்னை மாவட்டம் - வடசென்னை கோட்டம் திரு M.ரமேஷ்பாபு என்பவர் தனது தந்தை திரு.முனுசாமி என்பவர் 14.10.2019 அன்று  ஒண்டிக்குப்பம் கேரம்போர்டு கம்பெனி பின்புறம் திருவொற்றியூர் சென்னை - 19 என்ற முகவரியில்
காலமானதை தொடர்ந்து இறப்பை பதிவு செய்யக் கோரி மனு அளித்தது. 
பார்வை: மனுதாரர் திரு.M. ரமேஷ்பாபு என்பவரின் மனுநாள்: 07.09.2023 
மனுதாரர் பார்வையில் காணும் மனுவில் மனுதாரர் 
M. ரமேஷ்பாபு தனது/தந்தை திரு.முனுசாமி என்ப
வர் 14.10.2019 அன்று காலமானதை பதிவு செய்ய 
தவறிவிட்டதாகவும் அன்னாரின் இறப்பை பதிவு செய்யு
மாறு கோரியுள்ளார், இது தொடர்பாக மனுதாரரின்  
இறப்பினை பதிவு செய்வது குறித்து ஆட்சேபணை ஏதும் 
இருப்பின் அதனை வருவாய் கோட்ட அலுவலருக்கு 15 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படு
கிறார்கள்.

ஆர்.எம்.இப்ராஹிம்.பி.ஏ.,
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்,
வடசென்னை வருவாய் கோட்டம்
புழல் சென்னை - 600 066

கலைக்கல்லூரிகளில் மாணவிகளுக்கு தனி ஓய்வறை

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, செப்,26- தமிழகம் முழுக்க கலைக்கல்லூரிகளில் மாணவிகளுக்கு தனி ஓய்வறை அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இதற்காக ரூ. 8 கோடியே 55 லட்சம் தொகையை மூன்று வாரங்களில் ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுக்க பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வைக்கப்பட்டுள்ள சானிடரி நாப்கின் எந்திரங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதாக வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து இருந்தது. இந்த வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுக்க கலைக்கல்லூரிகளில் மாணவிகளுக்கு தனி ஓய்வறை அமைக்க வேண்டும் என்றும் இதற்காக தமிழக அரசு ரூ. 8 கோடியே 55 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.