சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமையன்று (டிச 3) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் கொண்ட சிறப்பு குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் இனிப்புகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பேச்சு பயிற்சியாளர் சுப்புலட்சுமி, முட நீக்கு வல்லுநர் ஆஷா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பணியாளர்கள், மாற்றுத்திறன் கொண்டோருக்கான சிறப்பு பள்ளி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.