districts

img

உட்புற சாலைகளை செப்பனிட வேண்டும் சிபிஎம் உறுப்பினர் பா.விமலா கோரிக்கை

சென்னை, மார்ச் 2 – சென்னை முழுவதும் உள்ள உட்புறச் சாலை களை செப்பனிட வேண்டும் என்று 41வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பா.விமலா வலியுறுத்தினார். சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பிய விமலா,  கார்னேஷ் நகர் நடுநிலைப்  பள்ளி மாணவர்கள் வேறு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு, 2 ஷிப்ட் முறையில் வகுப்பு கள் நடத்தப்பட்டு வருகி றது. பள்ளியை புதுப்பித்து கட்டும் பணி எப்போது தொடங்கும்? என்றார்.  இதற்கு பதிலளித்த மேயர் ஆர்.பிரியா, 2.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. மார்ச்.21  அன்று ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, புதிய கட்டி டம் கட்டப்படும் என்றார். இதனை தொடர்ந்து பேசிய விமலா, 41வது வார்டில் நிரந்தர தூய்மை தொழிலாளர்களுக்கு இணையாக என்யுஎல்எம் தொழிலாளர்கள் இருக்க வேண்டும். ஆனால், 70க்கும் மேற்பட்ட நிரந்தர  தொழிலாளர்கள் உள்ள னர். பெரும்பாலானோர் வயது முதிர்ந்தவர்களாக உள்ளனர். எனவே, இவர் களை பிற வார்டுகளுக்கு பகிர்ந்து கொடுத்து, என்யு எல்எம் தொழிலாளர்களை அதிகரிக்க வேண்டும். குடிநீர் வாரிய உதவி பொறியாளர் முறையாக பணியாற்றுவதில்லை; ஒத்துழைப்பதில்லை. அவர் மீது மேலாண்மை இயக்குநரிடமும் புகார் அளித்துள்ளேன். எனவே, அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். பிஆர்ஆர் சாலை மோசமான நிலையில் குண்டும் குழியுமாக  உள்ளது. மெட்ரோ குடிநீர் வெளியேறுவதும் அதற்கு காரணமாக உள் ளது. இதனால் மக்களிடம் அதிருப்தி நிலவுகிறது. எனது வார்டு மட்டுமின்றி, மாநகரம் முழுவதும் உள்ள உட்புறச் சாலைகளையும் செப்பனிட வேண்டும் என்றார்.  இதற்கும் பதிலளித்த மேயர், வயது முதிர்ந்த தொழிலாளர்களை அதே மண்டலத்திற்குள் பிற வார்டுகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாலைப் பணிகளை மேற்கொள்ள 761 கோடி  ரூபாய் உள்ளது. ஒவ்வொரு  பகுதியாக சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.