மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைய வலியுறுத்தி செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தி மாவட்ட தலைவர் என்.இளங்கோ தலைமையில் தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ப. பன்னீர் செல்வம், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலப் பொருளாளர் வி. கணபதி,அண்ணா குபேரன், எஸ்.கே. சண்முக சுந்தரம், விக்டர் சுரேஷ்குமார்(அரசுஊழியர்சங்கம்), என்.அருணாசலம்(அஞ்சல் ஓய்வூதியர் சங்கம்) , மூர்த்தி(ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலசங்கம்) ஆகியோர் பேசினர். நிறைவாக வயநாடு மக்களுக்காக ரூ 4505 நிதி வழங்கினர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கோ.இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் டி.மகேந்திரன் ஊரக வளர்ச்சித்துறை மாநில துணைத்தலைவர் எஸ்.காந்திமதிநாதன், ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.ஜெயராமன், மற்றும் கு.கன்னியப்பன் பி.விஜயகுமார், பூந்தமல்லி கோவிந்தன், ஆர்.கே.பேட்டை, எம்.எஸ்.நாயகம் ஆகியோர் பேசினர்.