சென்னை, ஜன. 13- இந்தியாவில் நுகர்வோர்களால் மிகவும் விரும்பி தேர்வு செய்யப்ப டும் ஒரு லூப்ரிகன்ட் ஆன சர்வோ. ஜனவரி 12 அன்று 50ஆவது ஆண்டில் வெற்றிகரமாக பிரவேசித்துள்ளது. இந்நிறுவனம் புதிய தலைமுறைக்கு பிரத்தி யேகமாக வடிவமைத்து பிஎஸ்-ஐவிக்கு இணக்கமான சர்வோ ஃப்யூச்சுரா என்எக்ஸ்டி ஒடபிள்யு -16 என்ற லூப்ரிகன்ட்-ஐ மேம்பட்ட ஆஃப்டர் ட்ரீட்மென்ட் சாதனங்களுடன் (ஏடிடி) அறி முகப்படுத்தியுள்ளது. இந்த லூப்ரிகன்ட் உயர் ஆக்ஸிஜனேற்ற நிலைத்தன்மை யுடன் மிகக்குறைந்த ஆயில் பயனீட்டை உறுதி செய்யும் விதத்தில் செயற்கைமுறை அடிப்படை யிலான பொருட்கள் மற்றும் உயர் செயல்திறன்கொண்ட சேர்க்கைகளுடன் கலந்து தயாரிக்கப்பட்டுள்ளது. சர்வோ ஃப்யூச்சுரா என்.எக்ஸ்.டி. ஒடபிள்யு -16 லூப்ரிகன்ட் 4 விழுக்காட்டிற்கும் மேல் மேம்பட்ட எரிபொருள் சிக்கனத்தை வழங்கு வதுடன் பசுமை இல்ல வாயுக்கள் வெளிப்படுவதையும் குறைத்து இன்ஜினை எல்எஸ்பிஐ என்ற லொ-ஸ்பீடு -ஃப்ரீ இக்னி ஷன் விளைவிலிருந்தும் பாது காக்கின்றது. இந்தியாவின் நெ.1 லூப்ரிகன்ட் பிராண்டான சர்வோ, இந்தியன் ஆயில் நிறுவனத்தினால் 1972ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட் டது. கடந்த பல ஆண்டுகளாக சர்வோ பல ரகங்களிலும் 1200 ஆக்டிவ் லூப்ரிகன்ட் கிரேடுகளை தயாரித்து சந்தைப்படுத்தும் செயலில் சிறந்த வளர்ச்சியை கண்டு வருகிறது. அது மட்டுமின்றி, 34 நாடுகளிலும் அதன் தடத்தைப் பதித்து தயாரிப்புகளை சந்தைப்படுத்தியுள்ளது. ஒரு சூப்பர் பிராண்டான சர்வோ தன்னிகரற்ற விதத்தில் முன்ன ணியில் இருப்பதோடு மட்டுமின்றி ராணுவம், ரயில்வேஸ், போக்கு வரத்து, மின்சாரம், நிலக்கரி, சுரங்கம், தானியங்கி வாகனங்கள், ஸ்டீல் போன்ற அனைத்து முக்கிய துறைகளுக்கும் அதன் தயாரிப்புகளை வழங்கி வருகிறது. மேலும், மாருதி சுஸூகி, `ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், அசோக் லேலண்ட் மற்றும் ம`ஹீந்திரா ஆகிய ஒரிஜினல் வாகன தயாரிப்பாளர்களும் விருப்பத்தேர்வின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட லூப்ரிகன்டாக சர்வோ திகழ்கிறது. பொன்விழா ஆண்டில் அடி யெடுத்து வைத்திருக்கும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம். வைத்யா, கடந்த 50 ஆண்டு காலத்தில் போட்டிச் சூழலிலும் அதனை நிலைநிறுத்திக் கொண்டு, புகழின் உச்சிக்கு செல்லும் விதத்தில் உலக அளவிலான தர அளவீடுகளையும் விஞ்சி செயல்பட்டு வருகிறது”என்றார். கடந்த ஆண்டுகளாக மாறி வரும் தேவைகளுக்கேற்ப ஈடு கொடுத்து வளர்ச்சி கண்டுவரும் சர்வோ சந்தையில் ஏற்படும் மகத்தான மாற்றங்களுக்கும் வாடிக்கையாளர்களின் விருப்பத் தேர்வுகளுக்கும் ஏற்ற வகையில் தயாரிப்புகளை வழங்கும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நெறிமுறைகளுக்கோர் உன்னத வெளிப்பாடாகும் என்றும் அவர் கூறினார். இந்த நிறுவனத்தின் இயக்கு நர் எஸ்.எஸ்.வி.ராம்குமார் பேசுகை யில், “ ஒவ்வொரு வாகன உரிமை யாளரின் இதயங்களையும் வெகு வாக கவர்ந்துள்ளது. இன்றளவில் 7000க்கும் மேற்பட்ட புதுமை உருவாக்கங்களுடன், சர்வோ தரம் மற்றும் செயல்திறன் ஆகிய இரண்டு வகைகளிலும் தொடர்ச்சியான மேன்மையை வெளிப்படுத்தி வாடிக்கை யாளர்களின் நம்பிக்கையை பெற்று வருகிறது என்றார்.