சென்னை, மே 2- மடித்து வைக்கும் திறன் கொண்ட டெக்னோ நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் பேண்ட்டம் விஃபோல்டு 5ஜி – ஐ செல்போனை சென்னையில் திரைக்கலைஞர் ஐஸ்வர்யா ராஜேஷ் அறிமுகம் செய்துவைத்தார். சென்னை மாநகரின் கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள பூர்விகா நிறுவன விற்பனையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டெக்னோ மொபைல் தலைமை செயல் அலுவலர் அரிஜித் தலபத்ரா, பூர்விகா நிறுவனர் யுவராஜ் நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். கைக்கு அடக்கமாக மடித்து வைக்கக்கூடிய இந்த மொபைல் விலை ரூ.88,888 ஆகும். மிகப்பெரிய திரை. 5-லென்ஸ்களுடன் கூடிய அல்ட்ரா ஹெச்டி கேமரா ஆகியவை அற்புதமான நிழற்படத் தரத்திற்கு உத்தரவாதம் அளிப்பதாக அரிஜித் தலபத்ரா கூறினார்.