சென்னை, மே 28-
சுற்றுச்சுழல் மாசுவை கருத்தில் கொண்டு மின்வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மே 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெற்ற மின் வாகன சர்வதேச கண்காட்சியில் பங்கேற்ற பலர் இந்த கருத்தை தெரிவித்தனர். இந்திய மின்வாகனத் தொழில்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை விளக்கும் வகையில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர மின்வாகனங்கள் இதில் இடம்பெற்றிருந்தன.
நீடித்த போக்குவரத்து தீர்வுகளுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் மின்வாகனங்கள் அதிகளவில் தேவைப்படுகிறது. ஆனால் அதன் விலை அதிகமாக இருப்பதால் வாங்குவதற்கு மக்கள் தயங்குகிறார்கள். எனவே அதிகளவில் உற்பத்தியாகும்போது விலை குறையும் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
இந்தியாவில் மின்வாகன தேவை அதிகரித்து வருவதால் இந்த தொழில்துறையானது பத்து லட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.