தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் தென்சென்னை மாவட்டம், வேளச்சேரி பகுதி சார்பில் மத நல்லிணக்க நோன்பு திறப்பு நிகழ்ச்சி எஸ்.முகமது ரஃபி தரமணியில் நடைபெற்றது. நலக்குழுவின் மாநிலச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், ஜெ.எம்.எச். அசன் மௌலானா எம்எல்ஏ, சமூக செயற்பாட்டாளர் க.பீம்ராவ், நலக்குழுவின் மாவட்டச் செயலாளர் ஒய். இஸ்மாயில், பகுதித் தலைவர் எஸ்.ராஜேந்திரன், பொருளாளர் அந்தோணி பெர்னான்டஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.