தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் நசரேத்பேட்டை மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் கல்வெட்டு திறப்பு மற்றும் கொடியேற்று விழா போரூர் கோட்டத் தலைவர் ஏ.ஆர்.பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர் கல்வெட்டை திறந்து வைத்தார். சென்னை மண்டலச் செயலாளர் ஏ.முருகானந்தம் சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் இ.விஜயலட்சுமி, திட்ட நிர்வாகிகள் வி.விஜயபாஸ்கர், டி.பண்டாரம் பிள்ளை, எஸ்.குமார், கே.தரணி, கோட்டச்செயலாளர் எஸ்.பழனி, இ.ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.