சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் புதிய கிளை துவக்க விழா வேலூர் அடுத்த பாகாயத்தில் கிளை தலைவர் எம்.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன் சங்கக் கொடியை மஞ்சள் ஏற்றி வைத்தார். மாவட்டத் தலைவர் டி.முரளி பெயர் பலகையை திறந்து வைத்தார். இதில் சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் எம்.பி.ராமச்சந்திரன், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் என்.பிரபாகரன், தலைவர் ஜி.கேசவன், கிளை செயலாளர் சி.ராஜேஷ், எஸ்.செல்வி (சிஐடியு), ஜி.நரசிம்மன், சி.எஸ்.மகாலிங்கம் (விவசாயிகள் சங்கம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.