districts

img

விழுப்புரம் நகராட்சியில் முதல் பெண் தலைவர் பதவி ஏற்பு

விழுப்புரம், மார்ச் 4- விழுப்புரம் நகராட்சி 1919ஆம் ஆண்டு உருவானது. 1953ஆம் ஆண்டு முதல் 2ஆம் நிலை நகராட்சியாக மேம்படுத் தப்பட்டது. அதனை தொடர்ந்து முதல்நிலை நகராட்சியாக 1973ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. நகரின் வளர்ச்சி யையொட்டி தேர்வுநிலை நகராட்சியாக 1988ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. துவக்கத்தில் 36 வார்டுகளாக இருந்த நகராட்சியில்,  2011ஆம் ஆண்டு சில பகுதிகள் இணைக்க ப்பட்டு மொத்தம் 42 வார்டுகளாக விரிவுபடு த்தப்பட்டது. கடந்த 1922ஆம் ஆண்டு இந்நகராட்சி முதல் தேர்தலை சந்தித்தது. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் திமுக 7 முறை யும், காங்கிரஸ் 7 முறையும், நீதிக்கட்சி 3 முறையும், அதிமுக 2 முறை யும் வெற்றி பெற்றுள்ளது.   தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் விழுப்புரம் நகராட்சி 29ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழ்செல்வி பிரபு நகர மன்றத் தலைவராக வெள்ளியன்று நடை பெற்ற மறைமுக தேர்தலில் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா பதவி பிரமாணம் செய்து வைத்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்கு அமைச்சர் பொன்முடி, எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன் ஆகியோர் வாழ்த்து தெரி வித்தனர். இதில் முன்னாள் எம்எல்ஏ புஷ்ப ராஜ், முன்னாள் தலைவர் ஜனகராஜ், நகரச் செயலாளர் சக்கரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழுப்புரம் நகராட்சியை 8ஆவது முறையாக திமுக கைப்பற்றியுள்ளது குறிப்பிடதக்கது.