சென்னை, அக்.18- சென்னையில் அடையாறு ஆலமரம் புகழ்பெற்ற இடங்களில் ஒன்று. அடை யாறு பாலத்தின் அருகே உள்ள பிரம்மஞான சபை என்பது அன்னிபெசன்ட் அம்மை யாரால் தொடங்கப்பட்டது. இந்த சபைக்கு பலகோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் அடையாறு ஆற்றின் கரையோரத்தில் உள்ளது. பல்வேறு வகையான மரங்கள் இங்கு உள்ளன. இதில் 14 ஏக்கர் நிலத்தை பிரம்மஞானசபை 43 ஆண்டு கால குத்தகைக்கு பிரபல எச்.சி. எல் நிறுவனரான ஷிவ்நாடார் பவுண்டே ஷனுக்கு அளித்துள்ளது. ஆண்டுக்கு 6.8 கோடி வாடகையும் உண்டு. ஆண்டுக்கு 2.5 விழுக்காடு வாடகை உயர்த்தப்படும். இந்த நிலத்தில் நவீன பள்ளி ஒன்றை ஷிவ்நாடார் பவுண்டேஷன் கட்ட உள்ளது. சர்வதேச கட்டிடக்கலை நிபுணர்களின் ஆலோசனை படி அந்த கட்டிடம் கட்டப்படும் என்று பள்ளி யின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள கோபால் கருணாகரன் கூறியுளளார். சுற்று சூழக்கு உகந்த முறையில் கட்டிட வடிவமைப்பு இருக்கும் என்றும் அவர் கூறினார். அடுத்தாண்டு ஜூன் மாதம் முதல் பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடங்கப் படும் என்றும் மழலையர் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை சுமார் 150முதல் 200 மாணவர்கள் முதற்கட்டமாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வகுப்பிலும் 24 மாணவர்கள் மட்டுமே இருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.