திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் சனிக்கிழமையன்று (நவ 18) உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் புதிய வழக்குகளை கையாளுவது மற்றும் அவ்வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பல்வேறு துறை அரசு அலுவலர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. உயர்நீதிமன்ற அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் முன்னிலை வகித்தார்.