கடலூர், ஜூலை 11-
கடலூர் மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக வெப்ப சலனம் காரணமாக 102 முதல் 104 டிகிரி வெயில் அளவு பதிவாகி மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியது. இந்த நிலையில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததாலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்க ளுக்கு மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
கடலூர் மாவட்டத்தில் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சிதம்பரம், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு, பரங்கிப்பேட்டை, புவனகிரி, குறிஞ்சிப் பாடி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து பெய்தது. இதனால், மாவட்டம் முழுவதும் விவ சாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதோடு அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்களை பாதுகாப்பாக வைக்கும் பணிகளிலும் விவசாயிகள் ஈடுபட்டு வரு கின்றனர்.