சமீபத்தில் பெய்த புயல் மழையில் அம்பத்தூர் அருகே உள்ள ஐசிஎப் காலனியில் இருந்து அயப்பாக்கம் செல்லும் திருப்பதி குடை சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. பள்ளம் ஏற்பட்டு 4 நாட்கள் ஆகியும் மாநகராட்சி நிர்வாகம் அதை சுற்றி தடுப்பு அமைக்கவோ, முடுவதற்கோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்வதற்கு முன் பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.