ராணிப்பேட்டை, டிச. 27 - ராணிப்பேட்டை மாவட்ட தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு அனைத்து தொழில் முனைவோர்கள், தொழிலாளர்கள் சார்பில் புதனன்று (டிச. 27) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சிப்காட் பேருந்து நிலையம் வரை மனித சங்கிலி இயக்கம் நடைபெற்றது. பீக் ஹவர் கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும், வாழ்வாதாரத்தை பறிக்கும் 430 விழுக்காடு நிலை கட்ட ணத்தை திரும்ப பெற வேண்டும், தொழில் கூடங்கள் அமைக்கும் சோலார் கான 15 விழுக்காடு கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். தொழிலை பாதுகாக்க வேண்டும், தொழில் நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட கடுமையான மின்கட்டண உயர்வை முற்றிலும் திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.