districts

img

ஓசூரில் கட்டமைப்பு வசதிகள் இல்லாத மருத்துவமனை

கிருஷ்ணகிரி,டிச.11- கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனை மருத்துவக் கல்லூரியுடன் இணைக்க படுவதற்கு முன்பு ஓசூர் மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவ மனையாக அறிவிக்கப்பட்டது. 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்த மருத்துவமனையில் 3 ஆண்டுகள் கடந்த பின்னும் உள்கட்டமைப்பு வசதிகள் தேவையில் பாதி அளவுக்கு கூட பூர்த்தி செய்யப்படா மல் உள்ளது. இது ஒரு புறம் இருக்க, 50 விழுக்காடு அளவுக்கு கூட ஊழியர்கள் இல்லாமல் மருத்துவ மனை இயங்கி வருகிறது. தற்போது மருத்துவர்கள், செவிலியர்கள் என மொத்தம் 12 பேர் மட்டுமே உள்ளனர். தமிழ்நாட்டில் கடும் பனி நிலவும் மாவட்டங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது ஓசூர். இந்த பருவ காலத்தில் வழக்கத்தை காட்டிலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகும்.  தற்போது, ஊசி போடும் அறைகள் இரண்டு இருந்தும் ஆண்-பெண் இருவருக்குமே ஒரே அறையில் ஊசி போடப்படுகிறது. செவிலியர் பற்றாக்குறையால் ஆண்-பெண் இருவரும் ஒரே அறை முன்பு வரிசையில் நூற்றுக்கணக்கில் காத்து கிடக்கும் நிலை ஏற்படுகிறது. மறுபக்கத்தில், மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்குவதற்கும் ஊழியர்கள் இல்லை. இதனால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி யுள்ளது. குறிப்பாக தும்மல், சளி, இருமலால் அவதிப்படும் குழந்தை களுக்கு மருத்துவர்கள் எழுதிக்கொடுக்கும் ரொமாக் சின், செப்ட்ரான் உள்ளிட்ட மருந்து வகைள் இல்லை என்கின்றனர். வெளியில் மருந்து கடைகளில் வாங்கிக் கொள்ளுங்கள் அலட்சிய மாக கூறுகின்றனர். வட்ட தலைமை மருத்துவ மனையின் கட்டமைப்பு வசதிகளை அதிகப் படுத்த வேண்டும். ஊழியர்கள் மற்றும் மருத்துவர், செவி லியர்களை கூடுதலாக பணியில் அமர்த்த வேண்டும், மருந்து மற்றும் மாத்திரை தட்டுப்பாட்டை களைய வேண்டும் என்று சுகா தாரத்துறை மற்றும் அமைச்சருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.