திருத்தணி, ஜூன் 13-
அரக்கோணம் அருகே உள்ள குருவராஜப் பேட்டை தங்கச்சாலை தெருவை சேர்ந்தவர் ரமேஷ்-நாகவல்லி தம்பதியின் 3 வயது மகள் நிரஞ்சனா.
உறவினர் வீட்டில் நடைபெற்ற குடும்ப நிகழ் வில் ரமேஷ் குடும்பத்துடன் பங்கேற்றார். மேலும் 2 குழந்தைகளுடன் ஞாயிறன்று(ஜூன் 11) மாலை புஜ்ஜிரெட்டிப்பள்ளி கிராமத்திற்கு சென்றார்.
அங்கு சிறுமி நிரஞ்சனா விளையாடிக்கொண்டு இருந்த போது பக்கத்து வீட்டில் மூடப்படாமல் இருந்த குடிநீர் தொட்டிக் குள் தவறி விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கி சிறுமி நிரஞ்சனா இறந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ள னர்.