விழுப்புரம், ஜூன் 13-
ஸ்ரீமதி வழக்கில் சிபிசிஐடி காவல் துறையினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நகல், ஆவணங்கள் அவரது தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் ஆட்சேபனை ஏதும் இருந்தால் தெரிவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம், பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த வர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுதி யில் தங்கியிருந்து படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார்.
இதுகுறித்து மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதி யியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்த னர்.
பின்னர் இந்த வழக்கு சிபி சிஐடி-க்கு மாற்றப்பட்டு விசா ரணை நடத்தப்பட்டது. இதன் விசாரணை முடிந்து கடந்த மே 15ஆம் தேதி 1,362 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை விழுப்புரம் தலைமை குற்ற வியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியைகளான கீர்த்திகா, ஹரிப்பிரியா ஆகிய இருவரின் பெயரையும் வழக்கில் இருந்து காவல் துறை யினர் நீக்கியுள்ளனர். இது தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்குமாறு ஸ்ரீமதியின் தாய் செல்விக்கு நீதி மன்றம் சம்மன் அனுப்பியது.
இதையடுத்து ஸ்ரீமதியின் தாய் செல்வி, தனது வழக்கறிஞர்களுடன் கடந்த 5ஆம் தேதி விழுப்புரம் நீதி மன்றத்தில் ஆஜராகி, இவ்வழக்கில் இருந்து ஆசிரி யைகள் இருவரையும் விடு வித்ததற்கு ஆட்சேபனை தெரி விக்க இருப்பதாகவும், அதற் காக குற்றப்பத்திரிகை நகல் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்கள், சாட்சியங்களின் பதிவு விவரம் ஆகியவற்றை தங்களிடம் ஒப்படைக்குமாறு மனு தாக்கல் செய்தார். அதன்படி ஸ்ரீமதியின் தாய் கேட்ட ஆவணங்களை ஒப்ப டைக்க வேண்டும் என்று நீதி மன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து ஸ்ரீமதி யின் தாய் செல்வி, வழக்கறிஞர்க ளுடன் விழுப்புரம் நீதி மன்றத்தில் ஆஜரானார். அவ ரிடம் குற்றப்பத்திரிகை நகல் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்கள், சாட்சியங்களின் பதிவு விவரம் ஆகியவை வழங்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் வரும் 21ஆம் தேதி நேரில் ஆஜராகி தெரிவிக்குமாறு நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.