districts

img

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கால்பந்து மைதானம் திறப்பு

சென்னை, ஆக,16

     கோவை, செட்டிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்கரூ அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட கால் பந்து மைதானத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி திறந்து வைத்தார்

   வாக்கரூ இன்டர்நேஷனல் நிறுவனத் தின் சமூக சேவை அமைப்பான வாக்கரூ அறக்கட்டளை பல்வேறு சமூக மற்றும் சமு தாய மேம்பாட்டு பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், கோவை, செட்டி பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்கரூ அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட அதிநவீன கால்பந்து மைதானம் திறக்கப்பட்டது.

     இந்த மைதானத்தில் பயிற்சி பெறும் கால்பந்து வீரர்களுக்கு பயிற்சி அளிக்க இந்த அறக்கட்டளை கோவையில் உள்ள புகழ் பெற்ற யுனைடெட் ட்ரீம் ஸ்போர்ட்ஸ் அகாடமி யுடன் இணைந்து உள்ளது. இந்த அகாட மியைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த பயிற்சி யாளர்கள் சுமார் 30 மாணவ, மாணவி களுக்கு கால் பந்து பயிற்சி அளிக்க இருக்கி றார்கள்   என்று வாக்கரூ இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நௌஷத் தெரிவித்துள்ளார்.