districts

காலை உணவு சமைக்கும் பணியினை பழங்குடி மக்களுக்கும் வழங்குக

மலைவாழ் மக்கள் சங்கம் வேண்டுகோள்

      தமிழகத்தில்  அரசுப் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் ஊட்டச்சத்து குறைபாடில்லாத குழந்தைகளை உருவாக்கிடவும், ஏழை, எளிய மாணவர்கள் பள்ளி இடைநிற்றலை குறைந்திடவும், முதலமைச்சரால் 2022 மே 6 அன்று சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ், அரசு பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும்  மாணவர்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் இலவச காலை உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை  துறை மூலம் தமிழ்நாடு மகளிர் மேம் பாட்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப் புடன் முதற்கட்டமாக 16 மாவட்டங்க ளில் 346 கிராம ஊராட்சிகள் மற்றும் 963 பள்ளி மையங்கள் அரசுப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

   மேலும் இந்தத் திட்டம் வரும் கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள  30 ஆயிரத்து 122 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல்  ஐந்தாம் வகுப்புவரை பயிலும் 18  இலட்சம் மாணவர்கள் பயன்பெறும்  வகையில் இத்திட்டம் விரிவுப்படுத் தவும் வரும் நிதியாண்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  குழந்தைகளுக்கு உணவு சமைக்கும் பணியினை மகளிர் சுய  உதவிக்குழு உறுப்பினர்கள் மட்டுமே  தேர்வு செய்ய வேண்டும். தேர்ந் தெடுக்கப்படும் மகளிர் சுய உதவிக்குழு  உறுப்பினர்களுக்கு அதே கிராம ஊராட்சியில் மற்றும் நகர்ப்புற பகுதி யில் வசிப்பவராக இருக்க வேண்டும். காலை உணவை சமைப்பதற்கும் பரிமாறுவதற்கும் உணவு தயாரிப்ப தில் போதுமான அடிப்படை அறிவு  பெற்றிருக்க வேண்டும். சுய உதவிக் குழு உறுப்பினர்களின் குழந்தைகள் அதே பள்ளியில் படிக்க வேண்டும்.

  குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.தேர்வு செய்யப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தங்கள் பெயரில் இணைய வசதியுடன் கூடிய ஆன்ராய்டு போன் வைத்திருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 3 ஆண்டுகளில் பெற்ற  கடன்களை, தவணை தவறாது நிலுவையின்றி செலுத்தியிருக்க வேண்டும்.  தேர்வு செய்யப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் இவர்  இருக்கும் சுய உதவிக்குழு போது மான நிதி இருப்பினை கொண்டிருக்க வேண்டும். என்ற தகுதியின் அடிப்படை யில் பணியாளர்களை தேர்வு செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

   தமிழ்நாட்டில் ஊரக வாழ்வாதார திட்டத்தின் (மகளிர் திட்டம்) 2023-ஏப்ரல்  மாத கணக்கின்படி  37 மாவட்டங்க ளில் மொத்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் எண்ணிக்கை 318305. இதில் பழங்குடி இருளர் இன பெண்களின் மொத்த மகளிர் சுயஉதவிக்குழுக்கள் 5479.

   2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை  கணக்கெடுப்புபடி பழங்குடி இருளர் இன மக்களின் குடும்பங்கள் கரூர் 575, புதுக்கோட்டை – 1283, இராமநாதபுரம் – 1105, திருவாரூர் – 3034. ஆனால் தமிழக அரசு கரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்களில் ஒரு பழங்குடி இருளர் மக்களின் மகளிர்  உதவிக்குழு கூட இதுவரை அமைக் கப்படவில்லை என்பது மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை சொல்லுகிறது.

  காலை உணவு திட்டத்தில் தமிழ்நாட்டில் 30 ஆயிரத்து 122 அரசு  தொடக்கப்பள்ளிகளில் செயல்படும் பணியாளர்களை தேர்வு செய்ய முடிவு செய்திருப்பது வரவேற்கதக்கது. அதேவேலையில், வாழ்வின் விளிம்பு நிலையில், குடிசைகளுக்கு குடிமனைப் பட்டா கிடைக்காமல் ஆற்றங்கரை, ஏரிக்கரை, குளக்கரை பகுதிகளில் நான்கு கொம்புகள் நட்டு டிஜிட்டல் பேனரில் குடிசை அமைத்து வாழ்ந்து வரும் பழங்குடி இருளர் இன பெண்கள், தமிழ்நாடு முழுவதும் 5479 மகளிர் சுய உதவிக்குழுக்களில் இருந்து வருகிறார்கள். இவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தமிழ்நாட்டின் சமூகநீதி அரசு காலை உணவு திட்டத் தில் பழங்குடி இன மகளிருக்கு பயிற்சி கொடுத்து பணி வழங்கி இம்மக்களின் வாழ்வு மேம்பட வாய்ப்பு  வழங்க வேண்டும் என தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்க மாநில துணைத்  தலைவர், ஆர்.தமிழ்அரசு வலியுறுத்தி யுள்ளார்.