கடலூர், அக்.15- கடலூர் சிப்காட்டில் உள்ள தமிழ்நாடு வாணிபக் கழக குடோனில் டாஸ்மாக் மதுபானங்களை ஏற்றி இறக்கும் சுமை பணி தொழிலாளர்களுக்கு சட்டப்படியான தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி கடலூர் டாஸ்மாக் சுமைப்பணி தொழி லாளர் சங்கம் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிப்காட்டில் உள்ள தமிழ்நாடு வாணிபக் கழக அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . சங்கத்தின் செயலாளர் எம்.தண்டபாணி தலைமை தாங்கினார். துணை செயலாளர் ஆர்.மோகன்ராஜ், நிர்வாகிகள் எம்.கருணா நிதி, எஸ்.பாரதி, எம்.பிரகாஷ், கே.வெங்க டேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்ட தலைவர் பி. கருப்பை யன், மாவட்ட துணைத் தலைவர் வி.சுப்புராயன், ஆர்.ஆளவந்தார், இணை செயலாளர் வி.திருமுருகன், ஏ.பாபு ஆகி யோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் ஏராளமான சுமை பணி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.