சென்னை, ஜன. 24- சென்னை ஐஐடி கேந்திரிய வித்யாலயாவில் தேசிய பெண் குழந்தைகள் தினம் இணைய வழியில் திங்களன்று (ஜன. 24) கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி மெக்கானிக்கல் இஞ்சினியரிங் பேராசிரியர் சுஜாதா சீனிவாசன் பங்கேற்று பேசுகையில், அனைத்து பெண் குழந்தைகளும் தங்க ளுக்கான உரிமைகள், பலன்களை பெறுவதில் பங்கு மற்றும் சமத்துவம் அளிக்கப்படவேண்டும், பெண் குழந்தை கள் தங்களது பலம் குறித்து அறிந்திருக்க வேண்டும், தங்களது இலக்கை அடைய உழைக்க வேண்டும் என்றார். பள்ளியின் முதல்வர் மாணிக்கசாமி பேசுகையில், பெண் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்காக அவர்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. ஆதரவற்ற, உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்காக ஆதரவு குரல் எழுப்புவது அனைவரது பொறுப்பு என்றார்.