திருவொற்றியூர் 4ஆவது வார்டில் சமுதாயக் கூடத்திற்கு அடிக்கல்
சென்னை, மார்ச் 4- திருவொற்றியூரில் சென்னை மாநகராட்சி நிதி மற்றும் சிபிசிஎல் சமூக பொறுப்பு நிதியின் மூலம் 3 கோடி ரூபாய் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா திங்களன்று (மார்ச் 4) நடைபெற்றது. சென்னை மாநகராட்சி மண்டலத்திற்குட்பட்ட 7ஆவது வார்டு கார்கில் நகரில் 1 கோடியே 95 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் அமைக்கும் பணியையும், 4ஆவது வார்டு ராமநாதபுரம் 1ஆவது தெருவில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் அமைக்கும் பணியையும் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.சங்கர், எஸ்.சுதர்சனம், மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு, மேற்கு பகுதி செயலாளர் வை.மா.அருள்தாஸ், 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், திமுக வட்டச்
நில அளவை அலுவலரை தாக்கியர்களை கைது செய்க
திருவண்ணாமலை, மார்ச். 4- தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பெரியகோட்டை கிரா மத்தில் நில அளவை அலு வலர் பவ்யா எல்லை அளவைப் பணி மேற்கொண்ட பொழுது முரு கானந்தம் உள்ளிட்ட சிலநபர்களால் தாக்கப் பட்டதை கண்டித்து திரு வண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாவட்டச் செய லாளர் சையத் ஜலால் தலைமை தாங்கினார், மாவட்டத் துணைத் தலை வர் வாசுதேவன், முன்னாள் நிர்வாகிகள் முல்லை வழுதி, வரதராஜன், பழனி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க நிர்வாகி சந்துரு, வட்டக் கிளை தலைவர் பருதிமால் கலைஞன், நெடுஞ்சாலைத்துறை சங்க நிர்வாகி மகாதேவன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஸ்ரீதர், நிர்வாகிகள் ரகுபதி, பார்த்திபன், புல உதவி யாளர் சங்க நிர்வாகி சுதா உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.
தமிழக ஆந்திர எல்லையில் யானை நடமாட்டம் : வனத்துறை எச்சரிக்கை
வேலூர். மார்ச் 4 - வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வனச்சரக பகுதியில் நாயக்கனேரி, சேராங்கல், பத்தலப்பல்லி, எருக்கம்பட்டு, குண்டலப்பல்லி உள்ளிட்ட காப்புக் காடுகளில் சிறுத்தைகள், யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஆந்திரா எல்லையான நெல்லிபட்லா வனப்பகுதியிலிருந்து காட்டு யானைகள் வெளியேறி தமிழக எல்லையான அரவட்லா, பாஸ்மார்பெண்டா ஆகிய மலை கிராமங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் (மார்ச் 3) ஞாயிறன்று சோதனைச்சாவடி அருகே திடீரென ஒற்றையானை சுற்றி திரிந்தது. சோதனைச் சாவடியில் இருந்த பணியாளர்கள் உடனே தங்களது அறைகளுக்குள் சென்று பூட்டிக்கொண்டனர். சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக அங்கு சுற்றித்திரிந்த யானை பின்னர் வெ.கோட்டா செல்லும் மலைப்பாதை வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் பேரணாம்பட்டு- வெ.கோட்டா சாலையில் பத்தலபல்லி அருகே மாநில எல்லையில் காவல் மற்றும் வனத்துறை சோதனைச்சாவடி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பலமணி நேரம் காத்திருந்து பிறகு சென்றனர். இதுகுறித்து வனத்துறையினர், வனப்பகுதிக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இரவு நேரங்களில் தங்கள் விவசாய நிலங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பத்தலப்பல்லி மலைப்பாதை வழியாக ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு வாகனங்களில் மாலை 6 மணி முதல் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும், யானைகள் நடமாட்டம் குறித்து தெரிய வந்தால் உடனடியாக பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்
தமிழகம் வந்து பொய் சொல்லிவிட்டு போகும் பிரதமர்: ஆர்.எஸ்.பாரதி
கடலூர்,மார்ச்.3- தமிழகம் வரும் போதெல்லாம் பிரதமர் மோடி பொய் பேசுவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ்.பாரதி கடலூர் கூட்டத்தில் சாடினார். எல்லோருக்கும் எல்லாம்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஆர்.எஸ்.பாரதி, அரசின் பணத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் மோடி, தமிழகம் வரும்போதெல்லாம் பொய் பேசிவிட்டுசெல்கிறார். 50 ஆண்டுகளுக்கு முன் திமுக செய்த திட்டங்களை தற்போது செய்யப்போகின்றோம் என மோடி கூறி வாக்கு கேட்கிறார். மற்ற கட்சியில் வெற்றி பெற்று வருபவர்களை பணம் கொடுத்து வாங்கும் வேலையைத்தான் மோடி கடந்த காலத்தில் செய்துள்ளார். இந்தியாவில் இதுவரை 400க்கு மேற்பட்ட எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்கி பிரதமர் சாதனை படைத்துள்ளதாக சாடிய ஜி.ராமகிருஷ்ணன், இந்த தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் இந்தியா கூட்டணி பிடிக்கும் என்றார் தமிழகம், புதுச்சேரியில் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று ஆர்.எஸ். பாரதி பேசினார். கூட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். திமுக மாநகர செயலாளர் கே.எஸ். ராஜா வரவேற்றார், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் பேசினர். பகுதி செயலாளர் சலீம் நன்றி கூறினார்.