districts

img

தோழர் சங்கரய்யாவுக்கு அஞ்சலி...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், தோழர் என்.சங்கரய்யாவின் மறைவையொட்டி ஆவடியில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்ற அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. இதில் ம.பூபாலன், அ.ஜான் (சிபிஎம்), அந்திரிதாஸ் (மதிமுக), மயில்வாகனன் (சிபிஐ), ஆதவன் (விசிக), அம்சா பாய் (பள்ளிவாசல் கூட்டமைப்பு) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சுதந்திர போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர் என்.சங்கரய்யா மறைவிற்கு பொன்னேரியில் அனைத்து வழக்கறிஞர்கள் சார்பில் வெள்ளியன்று (நவ 17), இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.காளமேகம், மாவட்ட துணைத் தலைவர் ஜி.சூரியபிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், சுதந்திர போராட்ட வீரர், தகைசால் தமிழர் தோழர் என்.சங்கரய்யா, தோழர் பாசுதேவ் ஆச்சார்யா ஆகியோருக்கு டிஆர்இயூ சார்பில் அஞ்சலிக் கூட்டம் மூர் மார்க்கெட் வளாகத்தில் சனிக்கிழமை(நவ.18)  நடைபெற்றது. இதில் பொது செயலாளர் வி.ஹரிலால், துணை பொதுச் செயலாளர் அருண்குமார் செழியன், துணைத் தலைவர் பேபி ஷகிலா, எக்ஸ்ட்ரா டிவிஷன் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, டிஆர்பியூ தலைவர் ஆர்.இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.