districts

img

வெளிமாநில பணியாளர்கள் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் - தெற்கு ரயில்வே அறிவுறுத்தல்!

சென்னை,மே 13- பயணிகள், சக ஊழியர்களிடம் உரை யாடுவதில் எவ்வித தடையும் இல்லாமல் இருக்க, இதர மாநிலங்களில் இருந்து வந்து தமிழ்நாட்டில் பணியாற்றும் ரயில்வே ஊழி யர்கள் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.  ரயில்வே நிலையங்களில் உள்ள டிக்கெட் வழங்கும் இடங்கள், ரயில் நிலையங்கள், டிக்கெட் பரிசோதகர், RPF ஊழி யர்கள், ரயிலில் பாதுகாப்பிற்காக இருப்ப வர்கள் உள்ளிட்டோர் பெரும்பாலும் இந்தி மொழியில் மட்டுமே பேசுவார்கள். இவர்களுக்கு தமிழ் மொழி புரியாது. தமிழ்நாட்டில் உள்ளவர்களுடன் இந்தியில் உரையாடினால் புரியுமா? அவர்கள் உள்ளூர் மொழி கொஞ்சம் கூட தெரியாமல் இருக்கிறதே என பலரும், அவர்களுடன் உரையாடுவதில் உள்ள சிக்கல்களை அவ்வப்போது தெரிவிப்பதுண்டு. இந்நிலையில்,  சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகளுக்கு தெற்கு ரயில்வே அனுப்பியுள்ள அறிக்கையில்,அடிப்படை தமிழ் மொழியில் பேசுவதற்கு உதவும் கையேட்டை தயாரித்து பணியாளர்க ளுக்கு பயிற்சி அளிக்குமாறு குறிப்பிடப் பட்டுள்ளது. இதேபோல கன்னடம், மலை யாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி களுக்கான பேசுவதற்கு உதவியாக இருக்கும் அடிப்படை கையேடு ஒன்றை தயாரிக்கவும் அவர்களுக்கு பயிற்சியளிக்கவும் தெற்கு ரயில்வே வலி யுறுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், பணி செய்யும் இடத்தின் பிராந்திய மொழியை கற்பதன் மூலம் பயணிகள், சக ஊழியர்களிடம் எளிதாக உரையாட முடியும். இதன் மூலம் மக்களுக்கு திருப்திகரமான சேவையை யும் வழங்க முடியும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.  பாஷா சங்கம் என்ற செயலி.. மத்திய கல்வித் துறையால் உருவாக்கப்பட்ட பாஷா சங்கம் என்ற செயலியை பயன்படுத்தி எளிதாக உள்ளூர் மொழிகளை கற்கலாம். விர்ச்சு வல் அகாடமி (Tamil Virtual Acade my)என்ற இணையதளத்தையும் தமிழ் மொழியை பேசுவதற்கு பயிற்சி எடுக்க பயன்படுத்தலாம் என்று அந்த அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;