districts

காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை

விழுப்புரம், ஜூலை 9-

    விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்திற்கு தமிழ்நாடு சட்டம்- ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குநர் அருண் வருகை தந்தார். அப்போது அவர் அங்குள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, மறைந்த கோயம்புத்தூர் சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

   பிறகு அவர், விழுப்புரம், காஞ்சிபுரம் சரக காவல் அதி காரிகளுடன் சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு குறித்து ஆலோ சனை நடத்தினார். அப்போது குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் உரிய முறையில் பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார். பணிச்சுமை, மன அழுத்தத்தை போக்கும் வகையில் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அவ்வப்போது உரிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும், வாரத்தில் ஒரு நாள் காவலர்க ளுக்கு விடுமுறை அளிக்கும் டி.ஜி.பி.யின் உத்தரவை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அருண் அறிவுரை வழங்கினார்.  

    அப்போது வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. கண்ணன், டி.ஐ.ஜி.க்கள் விழுப்புரம் ஜியாவுல்ஹக், காஞ்சிபுரம் பகலவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் விழுப்பு ரம் சசாங் சாய், கடலூர் ராஜாராம், கள்ளக்குறிச்சி மோகன் ராஜ், காஞ்சிபுரம் சுதாகர், செங்கல்பட்டு சாய் பிரனீத், திரு வள்ளூர் செபாஸ் கல்யாண் ஆகியோர் உடனிருந்தனர்.