சென்னை,ஆக.14
கடந்த சில நாட்களாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
திங்களன்று பிற்பகல் துவங்கி சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இடி, மின்னலுடன் கனமழை பெய்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டது. திருச்சி, மைசூர், கொச்சி, வாரனாசி, பாட்னா போன்ற இடங்களில் இருந்து வந்த ஐந்து விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. இதோடு சென்னையில் இருந்து ஐதராபாத், டெல்லி, மதுரை, கவுகாத்தி உள்ளிட்ட எட்டு இடங்களுக்கு புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதமாக சென்றன. விமான சேவை பாதிக்கப்பட்டதால், பயணிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.