districts

img

முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை துவக்க விழா

சென்னை,ஆக. 22- வடபழனியில் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின், 16வது முதலாமாண்டு மாணவர் சேர்க்கை துவக்க விழா  சமீபத்தில் நடைப்பெற்றது. கல்லூரியின் இணை வேந்தர்  முனைவர். இரவி பச்சமுத்து,  கல்லூரி மேம்பாட்டு இயக்குநர்   ஹரிணி ரவி,  கல்லூரி இயக்குனர் (கல்வி) முனைவர். எஸ்.இராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வேந்தர் முனைவர் சி.முத்தமிழ்ச்செல்வன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார். முதல்வர் சி.வி.ஜெயக் குமார் வரவேற்றார்.  சிறப்பு விருந்தினராக  பங்கேற்ற சென்னை - வடக்கு  மண்டல ஐஜிஅஸ்ரா கார்க்,  கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியுடன் உழைத்தால் வெற்றி பெறு வது உறுதி என  மாண வர்களை உற்சாகப்படுத்தி உரையாற்றினார். மாணவர் கள் வேகத்துடன் விவேக மாகவும் செயல்பட அறி வுறுத்தினார். விழாவின் இறுதியில் கல்லூரி துணை முதல்வர் சி.கோமதி நன்றி கூறினார்.