சென்னை, ஜூன் 17-
காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி உணவு பொருள் வழங்கல் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை கொளத்தூர் மண்டல அலுவலகத்தில் சனிக்கிழமை (ஜூன் 17) நடைபெற்றது. தலைவர் மா.பரவேஸ்வரி தலைமை தாங்கினார். துணை ஆணையர் த.சண்முகவேலு “தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013” குறித்தும், துணை ஆணையர் இரா.நெகேமியா “தமிழ்நாடு உணவு பாதுகாப்பு விதிகள் 2017” குறித்தும் பேசினர்.
பொதுச்செயலாளர் சு.அருண்குமார் வேலை அறிக்கையையும், பொரு ளாளர் ஆ.ராெஜஸ்வரி வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட சென்னை மாவட்டச் செயலாளர் ம.அந்தோணி சாமி வாழ்த்தி பேசினார். முன்னதாக துணைத் தலைவர் பா.சண்முகராஜ் வரவேற்றார். இணைச் செயலாளர் இரா.கலிய மூர்த்தி நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் துறைக்கான பணி விதிகள் உருவாக்குவது குறித்த நடவடிக்கையை துரிதப் படுத்த வேண்டும், துறை யின் மாவட்ட பணியிடங் களில் விகிதாச்சாரம் கோரி வரும் நிலையில் அரசால் கோரப்பட்டுள்ள கேள்விகளுக்கு உடனே பதில் அளிக்க வேண்டும், ஒரு வழி மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கிடப்பில் போடாமல் உடனே முன் மொழிய வேண்டும், வாடகை கட்டிடத்தில் இயங்கும் மண்டல அலு வலகங்களுக்கு சொந்த கட்டிடம் கோரியும் சொந்த கட்டிடத்தில் இயங்கும் மண்டல அலுவலகங்க ளுக்கு கட்டிடத்திற்கான பராமரிப்பு நிதியும் வழங்க வேண்டும்,
துறையில் களப்பணி மேற்கொள்ளும் பணி யாளர்களுக்கு பயணப் படியை உயர்த்தி வழங்க வேண்டும், அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணி யிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.