தீபாவளி பண்டிகை காலத்தில் வாங்க முடியாத அளவிற்கு விலைவாசியை உயர்த்திய ஒன்றிய பாஜக அரசை விமர்சிக்கும் வகையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பண்டிகை பஜார் இயக்கம் தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் புதனன்று (நவ 8) நடைபெற்றது. இதில் மாதர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் அ.பத்மா, மாவட்ட துணை நிர்வாகிகள் புஷ்பலதா, வழக்கறிஞர் கலைவாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.