பெரம்பூர் பகுதி 37ஆவது வட்டம் முல்லை நகர் பகுதியில் உள்ள கால்பந்து விளையாட்டு மைதானத்தை தனியாருக்கு விடுவதை கண்டித்து சிபிஎம், வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார், மாவட்ட குழு உறுப்பினர் எம்.ராஜ்குமார், பகுதிக் குழு உறுப்பினர்கள் ஆர்.ஜீவா, ஜே.பிரமிளா, முனுசாமி, டி.சரவணன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எல்.பி.சரவணதமிழன், பகுதிச் செயலாளர் கார்த்திக், தலைவர் நவீன், நிர்வாகிகள் ஜாபர், நித்திஷ், சுர்ஜித், ஸ்லம் சில்ட்ரன்ஸ் டெவலப்மெண்ட் கால்பந்து விளையாட்டு கோச்சர் தியாகராஜன், சாலையோர விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் மீரான் மொய்தீன், செயலாளர் அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.