இந்திய கண்டெய்னர் நிறுவன (கான்கர்) சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க கோரி வெள்ளியன்று (மார்ச் 24) திருவொற்றியூரில் ஆலை வாயிற்கூட்டம் நடைபெற்றது. சென்னை பெருநகர சுமைப்பணி தொழிலாளர் சங்கமும், கான்கர் சுமைப்பணி தொழிலாளர் சங்கமும் இணைந்து நடத்திய இந்தக் கூட்டத்தில், பொதுத்துறையை தனியார்மயமாக்குவதை கண்டித்தும், ஏப்ரல் 5 அன்று டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் - தொழிலாளர்கள் பேரணியை விளக்கியும் தலைவர்கள் பேசினர். கிளைச் செயலாளர் எஸ்.நவீன்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சிஐடியு மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, சுமைப் பணி சங்க மாவட்டச் செயலாளர் இரா.அருள்குமார் உள்ளிட்டோர் பேசினர்.