சென்னை, ஜூன் 4 -
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஞாயிறன்று (ஜூன்4)பள்ளிக்கரணை சதுப்பு நில பூங்கா வாயிலில் சூழலியல் சங்கிலி அமைத்து உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடை பெற்றது.
1973 ஆண்டு முதல் உலக சுற்றுச்சூழல் தினம் கடை பிடிக்கப்படுகிறது. இந்தியா வில் 2013ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் 143 நாடுகள் சுற்றுச்சூழல் தினத்தை கடைபிடிக் கின்றன. இந்த ஆண்டு ‘பிளாஸ்டிக் மாசுபாட்டிற் கான தீர்வுகள்’ எனும் கருப் பொருளில் உலக சுற்றுச் சூழல் தினத்தை கடைபிடிக்க ஐ.நா.சபை அறிவுறுத்தி உள்ளது.
இதனையொட்டி ‘சென்னை சதுப்பு நிலத்தை பாதுகாப்போம்’, ‘தமிழ் நாட்டின் நீர்நிலைகளை காப்போம்’, ‘புவிக்கோளை, எழில்மிகு இயற்கை தன்மையை, துடிப்புமிக்க உயிரினங்களை பாதுக் காப்போம்’ எனும் முழக்கத் தோடு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கம் இந்த நிகழ்வை நடத்தியது.
கடல் மாசுபாடு, பிளாஸ் டிக் மாசுபாடு, காற்று மாசு பாடு, அதிக மக்கள் தொகை, நிலையான நுகர்வு, புவி வெப்பமடைதல், நிலை யான வளர்ச்சி, உணவு பாதுகாப்பு, சட்ட விரோத வன விலங்கு வர்த்தகம், கடல் மட்டம் உயர்வு போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
சுற்றுச்சூழலை பாது காக்க குழந்தைகள் தாங்கள் வரைந்த விழிப் புணர்வு ஓவியங்கள், பதாகைகளோடு கலந்து கொண்டனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், குடியிருப் போர், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் சூழலி யல் சங்கிலியில் அணி வகுத்து நின்றனர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு - புதுச்சேரி முதன்மை கணக்காய்வுத் தலைவர் கே.பி.ஆனந்த் உறுதி மொழியை வாசித்து உரை யாற்றினார்.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சிறப்புச் செயலாளர் அனுராக் மிஸ்ரா குழந்தைகளுக்கு விதைப்பந்துகளை வழங்கி பேசினார்.
சுற்றுச்சூழல் விழிப் புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் எஸ்.மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ் வில் சோழிங்கநல்லூர் குடி யிருப்பு நலச்சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் வி.பார்த்திபன், சங்கத்தின் செயலாளர் இரா.சீனிவாசன், உதவிச் செயலாளர் என்.ெஜய முருகன், உதவித்தலைவர் பி.எஸ்.அப்பர், சைதை ஜெ. மற்றும் டி.மோகனா (தமிழ்நாடு அறிவியல் இயக்கம்), அழகுநம்பி வெல்கின் (யுனைட்), எஸ்.பிரதீப்குமார் (சென்னை யூத் சென்டர்) உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்ற னர்.