districts

மனித மரபணுக்களை அதிகப்படுத்தும் இந்திய மசாலா கலவைகள்

சென்னை, நவ.27  மிளகாய், பட்டை, கிராம்பு உள்ளிட்ட இந்தியா மசாலா பொருட்கள் இதயம், புற்றுநோய், நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. உண்மையான மசாலா பொருட்களை சுத்தம் செய்து அவற்றை உரிய முறையில் உணவில் பயன்படுத்தும்போது  மனித மரபணுக்களை அதிகப்படுத்தலாம் என்றும் ஆஸ்துமா, அதிக கொழுப்பு  ஆகியவற்றை எதிர்த்துப் போராட உதவும் என்றும் லைஃப் ஸ்பைஸ் நிறுவனர் கணேசன் வரதராஜன்  கூறினார். இது குறித்த ஒரு சோதனைக்கு காப்புரிமை கிடைத்துள்ளதாகவும் மேலும் மூன்று சோதனைகள் மீதான காப்புரிமைகள் விரைவில் கிடைக்க உள்ளதாகவும் அவர் கூறினார். கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்துவிற்கப்படும் மசாலா பொருட்களில் என்னென்ன கலந்திருக்கிறது என்பதை அறிந்தபின்னர் வாங்கவேண்டும் என்றும் இதனால் பிற்காலத்தில் ஏற்படும் உடல் நலக்குறைவுகளை தவிர்க்கமுடியும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.  லைப் ஸ்பைஸ் தயாரிப்புகள் அவை விளையும் இடத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு நவீன இயந்திரங்களை கொண்டு  பொடி செய்யப்படுவதாகவும் அவர் கூறினார். அன்றாட உணவில் இதனை  பயன்படுத்தப்படும் போது அது உணவுப்பொருட்களின் சுவைகளை கூட்டுவது மட்டுமல்லாமல்  உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது என்று இணை நிறுவனர் ராமசாமி வெங்கடாச்சலம் தெரிவித்தார்.   ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் ரூ. 22 கோடி செலவில் ஆண்டுக்கு 2000 டன் உற்பத்தி திறனை தமது நிறுவனம் கொண்டுள்ளது என்றும் உற்பத்தி திறனை  25,000 டன் வரை  விரிவாக்கம் செய்யும் போது கூடுதலான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அவர்கூறினார்.