districts

img

ஸ்விகி-யில் பணியாற்றுவோரை தொழிலாளர்களாக அங்கீகரிக்க வேண்டும் சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன் வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 9 - ஸ்விகி நிறுவன விநியோகிப்பாளர்களை தொழிலாளர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் வலியுறுத்தி உள்ளார், ஸ்விகி, சொமேட்டோ, டன்ஜோ உள்ளிட்ட நிறுவனங்களில் உணவு மற்றும் இதர பொருட்களை விநியோகம் செய்வோர் ஏராளமாக உள்ளனர். இந்த தொழிலாளர்களுக்கு அந்த நிறுவனங்கள் பணி ஆணையை வழங்காமல், அடையாள அட்டையை மட்டும் வழங்குகின்றன. காலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை பணியாற்ற நிர்பந்திக்கின்றன. 2015ம் ஆண்டு பெட் ரோல் 50 ரூபாய் விற்ற போது, ஒரு ஆர்டருக்கு 40 ரூபாய் கமிசனாக ஸ்விகி நிறுவனம் கொடுத்தது. தற்போது 100க்கு மேல் பெட் ரோல் விற்கப்படும் நிலை யில், 20 ரூபாய் மட்டுமே வழங்குகிறது. இந்நிலையில், ஒரு ஆர்டருக்கு 30 ரூபாயும், பேட்ச் ஆர்டருக்கு 20 ரூபாயும் வழங்க வேண்டும், பொருட்களை எடுக்கும் இடத்தில் டோக்கன் முறையை ரத்து செய்து, காத்திருப்பு கட்டணத்தை வழங்க வேண்டும். கிலோ மீட்டருக்கு 10 ரூபாய் ஊதி யம் தர வேண்டும், வாடிக்கை யாளர் சேவை மையத்தில் தமிழில்  பேச வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி வியாழனன்று (மார்ச் 9) எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகிக்கும் ஊழி யர்கள் சங்கம் இந்த  போராட்டத்தை நடத்தியது. இதில் கலந்து கொண்டு அ.சவுந்தரராசன் பேசுகை யில், ஸ்விகி நிறுவனத்தில் உள்ளது போன்ற தொழி லாளர் முறை அனைத்து நாடுகளிலும் உள்ளது. இதற்கெதிரான போராட்ட மும் வலுத்து வருகிறது. உலக தொழிலாளர் அமைப் பும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நமது போராட்டம் இந்தியாவில் வலுவடையும்போது, உலக ளவில் பெரும் போராட்ட மாக அது மாறும் என்றார். உணவு விநியோகிக்கும் தொழில் ஒருவரை 40  வயதிற்குள் முதுமை யடையச் செய்து விடும்.  இளம் வயது மரணத்தை  ஏற்படுத்தும். இத்தகைய  தொழிலில் உள்ளவர்க ளுக்கு குறைந்தபட்ச ஊதி யத்தை நிர்ணயிக்க மறுப்பதில் நியாயம் உள்ளதா? இத்தகைய தொழி லாளர்களுக்கென்று தனி  வழிகாட்டுதல்களை அல்லது தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும். இத்தகைய பணியில் உள்ளவர்களை தொழி லாளர்களாக அங்கீகரித்து சட்டச் சலுகைகளை வழங்க வேண்டும். வெளிமாநில தொழிலாளர்கள் நலன் காக்க நடவடிக்கை எடுக்கும் அரசு, மாநிலத்தில் உள்ள தொழிலாளர்களின் நலனையும் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் கே.சி.  கோபிகுமார் தலைமை தாங்கினர். சிஐடியு வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந் திரன், மாவட்டச் செயலா ளர்கள் சி.திருவேட்டை (மத்தியசென்னை), பா.பாலகிருஷ்ணன் (தென் சென்னை), சங்கத்தின் பொதுச் செயலாளர் ராம கிருஷ்ணா உள்ளிட்டோர் பேசினர்.