தொழிற்சாலையில் அவசரகால ஒத்திகை
சென்னை, ஜூலை 19- மணலியில் உள்ள தமிழ்நாடு பெட்ரோ புராடக்ட்ஸ் லிமிடெட் தொழிற்சாலையில் புறவ ளாக அவசரகால ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
தொழிற்சாலையில் குளோரின் வாயு கசிவு ஏற்படுவதாகவும், அதன் விளைவாக சுற்றுப்புறத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதிப்பு அடையும் ஓர் சூழ்நிலையை காட்சிப் படுத்தி அரசுத் துறைகளான தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை உள்ளிட்ட 14 அரசு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு, இம்மாதிரியான பேரிடரை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த ஒத்திகையை நடத்தினர்.
இந்நிகழ்ச்சியை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கு நர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். சென்னை மாநக ராட்சி துணை ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமை தாங்கினார்.
வடசென்னையில் இன்று மின்தடை
சென்னை, ஜூலை 19- வடசென்னையில் சனிக்கிழமை (ஜூலை 20) வியாசர்பாடி, அம்பத்தூர், ஆவடி பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
வியாசர்பாடியில் ஒ.எச்.பி., கிழக்கு கல் மண்டபம், மேற்கு கல் மண்டபம், எஸ்.என். செட்டி தெரு, என்.ஆர்.டி. ரோடு, கிழக்கு மாதா கோயில் தெரு, ரயில்வே பிரஸ், முத்தியால்பேட், ஜீவரத்தினம் குடியிருப்புகள், ஜி.எம்.பேட்டை, புதிய வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் மின் தடை ஏற்படும். அம்பத்தூரில் கலைவாணர் நகர், அயப்பாக்கம், டி.வி.கே.ரோடு, டி.ஜி.அண்ணா நகர் ரோடு, கே.கே.நகர் ரோடு, டி.என்.எச்.பி., அண்ணனூர், டி.என்.எச்.பி. அயப்பாக்கம் பிளாட் எண். 1 முதல் 8000 வரை, டி.என்.எச்.பி. 608 குடியிருப்பு கள், 338 குடியிருப்புகள், யாதவால் தெரு, பெருமாள் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் மின் தடை ஏற்படும். ஆவடியில் ஸ்ரீராம் நகர், ஜீவா ரோடு, குரு சாந்தி நகர், மாரியம்மாள் நகர், தாண்டல் கழனி, தியாம்பாப்பம், வீராபுரம், டி.எஸ்.பி. கேம்ப், அலமாதி, மோரை, வீராபுரம், கன்னியம்மன் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாப்பூர் நிதி நிறுவனம் முன்பு முதலீட்டாளர்கள் போராட்டம்
சென்னை, ஜூலை 19 - மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் முதிர்வுத்தொகையை கேட்டு வெள்ளியன்று (ஜூலை 19) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மயிலாப்பூரில் ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 150 ஆண்டுகள் பழமையான இந்நிறுவனத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்புத் தொகை வைத்துள்ளனர். 525 கோடி ரூபாய்க்கு மேல் நிரந்தர வைப்புத் தொகை உள்ளது.
இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பாஜகவை சேர்ந்த தேவநாதன் யாதவும், நிரந்தர நிதி செயலாளராக ரவிச்சந்திரனும் உள்ளனர். நிரந்த வைப்பு வைத்தவர்களுக்கு முதிர்வு தொகை, அதற்கான வட்டியை ஓராண்டுகளாக தராமல் உள்ளனர்.
முதலீட்டுத் தொகையை திரும்ப கேட்டு கடந்த 5 மாதங்களாக போராடி வரும் மக்கள், கடந்த 11ந் தேதியன்று நிறுவனம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, 18ந் தேதிக்குள் 35 கோடி ரூபாயை தருவதாக நிதிச் செயலாளர் கூறினார். அதன்படி தரவில்லை. இதனால் 150க்கும் மேற்பட்டோர் நிறுவனத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் பின்னர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலுவை சந்தித்து முறையிட்டனர்.
திருக்கண்டலம் ஊராட்சியில் ஆட்சியர் ஆய்வு
திருவள்ளூர்,ஜூலை 19- திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருக்கண்டலம் ஊராட்சி யில் வெள்ளியன்று (ஜூலை 19) மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் ஊரகப் பகுதியில் நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) என்.சுகபுத்ரா உட்பட பலர் உடன் இருந்தனர்.