districts

img

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...

அகவிலைப்படி உள்ளிட்ட 23 சலுகைகளை பறிக்கும் வாரிய சுற்றறிக்கையை  திரும்ப பெறக்கோரி  தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் தென்சென்னை கிளை-1 சார்பில் செவ்வாயன்று (செப்.13) கே.கே.நகர் மேற்பார்வை பொறியார் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு கிளைத்தலைவர் வி.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர், மாநிலச் செயலாளர் இ.விஜயலட்சுமி, கிளைச்செயலாளர் டி.பண்டாரம்பிள்ளை, பொருளாளர் எஸ்.குமார் உள்ளிட்டோர் பேசினர்.


மின்சார வாரியத்தில் உள்ள 56 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சென்னை வடக்கு சார்பில் பெரம்பூர் பெரியார் நகரில் உள்ள பிரிவு அலுவலக வளாகத்தில் கவுரவத் தலைவர் மதன் கோபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில நிர்வாகி சாலட், செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் சத்தியமூர்த்தி, கே வெங்கடய்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மின்சார வாரியத்தில் உள்ள 56 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சென்னை மேற்கு சார்பில் திருமங்கலம் செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணை பொதுச்செயலாளர் கே.ரவிச்சந்திரன், தமிழ்நாடு பவர் இன்ஜினியரிங் அசோசியேஷன் பொதுச்செயலாளர் கே.அருள்செல்வம், தலைவர் தசரதன், பொருளாளர் சி.அஜிக்குமார்  உள்ளிட்ட பலர் கலந்து கலந்து கொண்டனர்.


58 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி செவ்வாயன்று (செப்.13) தாம்பரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் சென்னை தெற்கு கிளை - 2ன் தலைவர் எம்.தண்டபாணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மண்டலச் செயலாளர் ஏ.முருகானந்தம், பொறியாளர் அமைப்பின் மாநில பொருளாளர் ஆதன் இளங்கீரன், கிளைச் செயலாளர் பி. கவுதமன் உள்ளிட்டோர் பேசினர்.


 

;