சென்னை, ஏப்.13- மக்களவைத்தேர்தலில், 100விழுக்காடு வாக்களிப் பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், சென்னை மாவட்டத்தில் 3 மக்களவைத் தொகுதிகளி லும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, சனிக்கிழமை (ஏப்.13) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற பல்வேறு கல்லூரிகளின் மாணவ, மாணவியரிடையே தேர்தல் குறித்த வினாடி வினாப் போட்டியினை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தொடங்கி வைத்து, பல்வேறு கேள்விகளுக்குப் பதி லளித்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி அவர் களுடன் கலந்துரையாடி னார். இந்த வினாடி வினாப் போட்டியில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 30 கல்லூரிகளிலிருந்து ஒரு குழுவிற்கு 2 நபர்கள் என 150 குழுவாக 300 மாண வர்கள் கலந்து கொண்டனர். இக்குழுக்களிலிருந்து தேர்தல் குறித்து கேட் கப்பட்ட கேள்விகளுக்கு சிறப்பாகப் பதிலளித்த 12 குழுக்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கிடையே நடை பெற்ற புதிர் போட்டியில் சிறப்பாக பதிலளித்து தேர்வு செய்யப்பட்ட லயோலா கல்லூரியைச் சார்ந்த குழு விற்கு முதல் பரிசாக ரூ.20 ஆயிரமும் சென்னை மருத்து வக் கல்லூரியைச் சார்ந்த குழுவிற்கு ரூ.10ஆயிரமும், எஸ்.எஸ்.என். கல்லூரி யைச் சார்ந்த குழுவிற்கு ரூ.5ஆயிரமும் வழங்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆணை யர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசுகையில், கல்லூரிகளில் பயிலும் முதல் முறை யாக வாக்களிக்கும் மாண வர்கள் தங்களின் வாக்கினை தவறாமல் செலுத்தி 100 விழுக்காடு வாக்களிப்பினை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.