வெறுப்பு பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக் கோரி சனிக்கிழமையன்று (ஏப்.27) சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் பேசினார்.