districts

நுரையீரலில் சிக்கிய சோளத் துண்டுகளால் அவதிப்பட்டவரை காப்பாற்றிய மருத்துவர்கள்

சென்னை, ஜன. 11 செங்கல்பட்டு அருகே உள்ள சென்னை மகேந்திரா வேர்ல்டு சிட்டியைச் சேர்ந்த 55 வயதான நபர் ஒருவர் சோளத்தை படுத்துக் கொண்டே சாப்பிட்டதால் அது அவரது மூச்சுக் குழாய் வழியாக சென்று நுரையீரலில் சிக்கிக் கொண்டது.   இதன் காரணமாக அவருக்கு திடீரென இருமலும் மூச்சு விடுவதில் சிரமமும் ஏற்பட்டது. குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் அவருக்கு சிடி ஸ்கேன் மற்றும் ப்ரோன்கோஸ்கோபி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது வலது நுரையீரலின் வலது கீழ் மடல் அடிப் பகுதியில் சுமார் 3 செ.மீ அளவுள்ள சோளத் துண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் நுரையீரல் நுண்துளையீட்டு ஆலோசகர்  மருத்துவர் பென்ஹூர் ஜோயல் ஷட்ராக் தலைமையிலான நிபுணர்கள் குழு, ப்ரோன்கோஸ்கோபிக் சாதனத்தை நுரையீரலுக்கு வாய் வழியாக அனுப்பி அந்த சோளத் துண்டுகளை அகற்றினர். சிகிச்சைக்குப் பிறகு அந்த நபரின் நுரையீரல் செயல்பாடு சீரானது. மேலும் எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் அதே நாளில் அவர் முழுமையாக குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டார். சரியான நேரத்தில் அளித்த சிகிச்சை மூலம் அவர் அன்றைய தினமே அந்த நபர் இயல்பு நிலைக்கு திரும்பினார் என்று டாக்டர் ஜோயல் ஷட்ராக்  தெரிவித்தார். இதனை ரேலா மருத்துவமனையின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.