திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசு முதன்மை செயலாளர், வணிக வரித்துறை ஆணையர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தீரஜ்குமார் தலைமையில் அனைத்து துறைகளின் வளர்ச்சி திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, திட்ட இயக்குநர், மகளிர் திட்டம் சையித் சுலைமான், செய்யார் சார் ஆட்சியர் அனாமிகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வீ.வெற்றிவேல், வருவாய் கோட்டாட்சியர்கள் ஆர்.மந்தாகினி (திருவண்ணாமலை), ம.தனலட்சுமி (ஆரணி) மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.