districts

img

மாற்றுத்திறனாளிகள் உண்ணாநிலை போராட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை கடன்களை வழங்க தவறிய வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; எளிதாக கடன் வழங்கும் வகையில் நடைமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும், வங்கி கிளைகள், ஏடிஎம் மையங்களை இலகுவாக பயன்படுத்தும் வகையில் மாற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று (ஜூலை 4) வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேரா. தீபக் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் பேசினார்.